சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.25-ஆம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2021 ல் தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் த.மா.கா சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவை பிப்ரவரி 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை, ஆழ்வார்பேட்டை, த.மா.கா தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
விருப்ப மனு கட்டணமாக பொதுத்தொகுதிகளுக்கு ரூ. 5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ. 2,500 செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.