தமிழகத்தில் புதிதாக 486 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 187 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 486 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,51,063 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 491 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 8,34,534 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 12,493 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 4,036 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.