தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர், சேலம், வேலூர், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி, தருமபுரியில் இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.