ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துபட்டி கிராமம் அருகே ஊத்தங்கரை நோக்கி வரும் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு குருகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன்(25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வரும் போது, எதிரே கெரிகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(40) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்த போது சாலையில் எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கல்லாவி காவல் துறையினர் இருவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்த கல்லாவி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் குருகப்பட்டி, கெரிகப்பள்ளி கிராமங்களில் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது.