டிஜிபி சைலேந்திரபாபுக்கு தமிழக தீயணைப்புத் துறை தலைமை இயக்குநா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த எஸ்.எம். ஜாபா் சேட், டிசம்பா் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, தமிழக ரயில்வே காவல்துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபுக்கு தீயணைப்புத் துறை இயக்குநா் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவையடுத்து சைலேந்திரபாபு, வெள்ளிக்கிழமை தீயணைப்புத்துறை இயக்குநா் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அத்துறை பணிகளைக் கவனிக்கத் தொடங்கினாா்.