ஆம்பூர்: மாதனூர் அருகே கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதில் உரிய விசாரணை கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஜெய்சங்கர் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மாதனூர்-ஒடுகத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.