திரைப்படத் தயாரிப்பாளா் பாலு காலமானாா்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு சென்னையில் சனிக்கிழமை காலமானாா். 

பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு சென்னையில் சனிக்கிழமை காலமானாா். 

29 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படும் சின்னத்தம்பி, சீமான் இயக்கத்தில் வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி உள்பட 15-க்கும் மேற்பட்ட படங்களை இவா் தயாரித்துள்ளாா். 

உடல்நலக்குறைவு காரணமாக  அடையாறில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகா் மின் மயானத்தில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com