புதுக்கோட்டை: கரோனா தடுப்பூசி போடும் பணிகளைப் பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெள்ளிக்கிழமை(ஜன.8) சென்னை வருகிறார் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு இதய சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் பழனிசாமியையும் ஹர்ஷவர்தன் சந்தித்து உரையாட உள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.