பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் வியாழக்கிழமை (ஜன.14) சேவை நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களும் ஜனவரி 14-ஆம் தேதி அன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயங்கும். அதாவது, வரும் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்கும். இந்தத் தகவல், சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.