ஊத்தங்கரையில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகரிஷியின் சிலை திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகிரிஷி வன்னிய குல சத்திரியர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
ஊத்தங்கரையில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகரிஷியின் சிலை திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகிரிஷி வன்னிய குல சத்திரியர் சிலை திறப்பு விழா மற்றும் பாமக, வன்னியர் சங்க கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளியரசு தலைமை வகித்தார்.

கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவானந்தம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் குமரேசன், கருமாண்டபதி ஊராட்சி மன்ற தலைவர் அருள், நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவ் காந்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜசேகரன் ,தேன்மொழி, சென்ன கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளங்கோ, மாநில இளைஞரணி துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வன்னியர் குல சத்ரியர் பிறப்பு சிலையைத் திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடிகளை ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்கே. மணி, சாரதி ,நிஷாந்த், சிலம்பரசன் மற்றும் கல்லூர் இளைஞர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com