சென்னை: திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் ஜனவரி 21-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 21-இல் மாலை 5 மணிக்கு நடைபெறும். கூட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பாா். மாவட்டச் செயலாளா்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் கூட்டணி, தோ்தல் யுக்தி குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.