மயிலாடுதுறையில் நேதாஜி பிறந்தநாள் விழா 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் அவரது திருவுருவப் படத்துக்கு அகில இந்திய முக்குலத்தோர் பாசறை சார்பில் சனிக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழாவில் அவரது திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில இளைஞரணி செயலாளர் ஆத்தூர் ஏ.எஸ்.ராஜா உள்ளிட்டோர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழாவில் அவரது திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில இளைஞரணி செயலாளர் ஆத்தூர் ஏ.எஸ்.ராஜா உள்ளிட்டோர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் அவரது திருவுருவப் படத்துக்கு அகில இந்திய முக்குலத்தோர் பாசறை சார்பில் சனிக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில இளைஞரணி செயலாளர் ஆத்தூர் ஏ.எஸ்.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் முத்து.முரளி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி.கில்லிபிரகாஷ், ஒன்றிய செயலாளர் எஸ்.வினோத்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் ஆர்.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் எஸ்.செந்தமிழன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இந்தியத் தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாப்போம், இந்திய சுதந்திரத்தை தொடர்ந்து பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com