சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

​சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு, விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வி.கே.சசிகலா (கோப்புப்படம்)
வி.கே.சசிகலா (கோப்புப்படம்)


சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு, விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு, விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ( சனிக்கிழமை இரவு 8 மணி நிலவரம்) வெளியிட்டுள்ளது.

மருத்துவமனை விளக்கம்:

"அறிகுறிகள் குறைந்துள்ளன. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை கட்டுப்பாட்டில் உள்ளன. அவர் உணவை இயல்பாக எடுத்துக்கொள்கிறார். கரோனாவுக்கு அளிக்கப்படும் சிக்ச்சையே அவருக்கு அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்கிறார். 

தீவிர மருத்துவக் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com