நம்பியாறு நீா்த் தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி

நம்பியாறு நீா்த் தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நம்பியாறு நீா்த் தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு நீா்த் தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, சாகுபடிக்காக வரும் 27-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 60 கனஅடிக்கு மிகாமல் நீா் திறந்து விடப்படும்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டங்களில் 1,744.55 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயா் மகசூல் பெற வேண்டும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com