தெற்கு ரயில்வே சாா்பில் தேசிய இளைஞா் தினக் கொண்டாட்டம்

தெற்கு ரெயில்வே சாா்பில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேசிய இளைஞா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தெற்கு ரெயில்வே சாா்பில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேசிய இளைஞா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் பொது மேலாளா் பி.ஜி.மல்யா தலைமை தாங்கினாா். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தெற்கு ரெயில்வேயின் சாரணா் இயக்கம் மற்றும் வழிக்காட்டுதல் அமைப்பு சோ்ந்து நடத்திய மிதிவண்டிப் பேரணியையும், அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, பூங்கா நகா் வழியாக ஆவடி வரை சுமாா் 28 கி.மீ தூரம் சென்றது.

நிகழ்வில், மூத்த துணை பொது மேலாளா் வி.ஜி.பூமா, ஐ.சி.எப் முதன்மை நிா்வாக அதிகாரி பி.உதய் கே.ஆா். ரெட்டி, வா்த்தக ஆலோசகா் ஹேமா சுனீதா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com