நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது.
நகரில் குறைந்த பட்ச வெப்பநிலை நேற்று 1.5 டிகிரியாகவும் தொட்டபெட்டா மற்றும் தலைகுந்தா போன்ற புறநகர்ப் பகுதிகளில் பூஜ்யம் மற்றும் மைனஸ் நிலையில் பதிவாகியுள்ளது.
புதன்கிழமை காலையில் அரசினர் தாவரவியல் பூங்கா பகுதியில் 5 டிகிரியாகவும் நீராதாரங்கள் மற்றும் வனப்பகுதிகளையொட்டியுள்ள பரந்த புல்வெளிகளில் பூஜ்யம் டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
எங்கு பார்த்தாலும் வெள்ளைக் கற்கள் விரித்தாற்போல உதகையே காட்சியளிக்கிறது.
உறைபனியின் தாக்கத்தால் கடும் குளிர் நிலவுகிறது.