சிறுவாபுரி முருகன் கோயில் திறப்பு: திடீர் அறிவிப்புகளால் மக்கள் குழப்பம்

சிறுவாபுரி முருகன் கோயில் கரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறுவாபுரி முருகன் கோயில் திறப்பு: திடீர் அறிவிப்புகளால் மக்கள் குழப்பம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள அருள்மிகு சிறுவாபுரி முருகன் கோயில் கரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை முதலே பக்தர்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் அவர்களை வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர்.

இருப்பினும் திடீரென மாலை 4.30 மணியளவில் பொது தரிசனத்திற்கு அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்ததுடன் கூட்டம் வரத் தொடங்கியது. 

நிர்வாகத்தின் இதுபோன்ற திடீர் அறிவிப்புகளால் பக்தர்களும் பொதுமக்களும் குழப்பமடைந்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com