7 மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 7) பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 7) பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: உள் தமிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், புதன்கிழமை (ஜூலை 7) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தலா 90 மி.மீ, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 80 மி.மீ., ஈரோடு மாவட்டம் தாளவாடி, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 50 மி.மீ., மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 40 மி.மீ, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 30 மி.மீ, திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தலா 20 மி.மீ., விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா், திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் ஜூலை 8-ஆம் தேதியும், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஜூலை 9, 10 ஆகிய தேதிகளிலும் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்தக் காற்றுவீசும் என்பதால், ஜூலை 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com