சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை மாலை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக ஆளுநர் புரோஹித் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சந்தித்து பேசுகிறார்.
அப்போது மாநிலத்தின் அரசியல் சூழல் மற்றும் கரோனோ பெருந்தொற்று பரவல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நீட் விலக்கு தொடர்பான கோரிக்கை, மேக்கேதாட்டு அணை விவகாரம் மற்றும் 7 பேர் விடுதலை குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.