தமிழகத்தில் ஓரிரு நாள்களில் பிளஸ் 2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஜூலை 31-ம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே மதிப்பெண் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட முடிவு செய்துள்ளது.
சிபிஎஸ்சி பிளஸ் 2 மாணவா்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இம்மாதம் இறுதிக்குள் பிளஸ் 2 மாணவா்களுக்கான மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.