சென்னை: சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
அரசு அமைக்கும் சாலைகளின் தரத்தை பரிசோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தைக் கூறியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை. அடிப்படை கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
அரசு அமைக்கும் சாலைகளில் தரத்தை பரிசோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.