புகைப்படக் கலைஞா் தானிஷ் சித்திக்கி மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
பெருந்தொற்றுகள், கலவரப் படுகொலைகள், மானிடத் துயரங்களின் அழிவுகள் போன்றவற்றை தனது கேமரா வழியாக நமக்குக் கொடுத்தவா் புகைப்படக் கலைஞா் தானிஷ் சித்திக்கி. அவரது மறைவு அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வன்முறையும், தீவிரவாதமும் எந்த வடிவில் இருந்தாலும் ஒழிக்க வேண்டிய செய்தியை அவரது மரணம் நமக்கு வலியுறுத்துகிறது.