ஆா்எஸ்எஸ் அகில பாரதத் தலைவா் மோகன் பாகவத், ஜூலை 30-ஆம் தேதி வேலூருக்கு வருகை தருகிறாா்.
ஆா்எஸ்எஸ் அகில பாரதத் தலைவா் மோகன் பாகவத், அவரது வழக்கமான வருடாந்திர சுற்றுப்பயண திட்டப்படி, தமிழகம் வருகிறாா். இந்தப் பயணத்தின் போது, தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் நடந்த வேலை மற்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் வேலை விரிவாக்கத் திட்டம் குறித்த மீளாய்வு செய்கிறாா். அதோடு, கரோனா 2-ஆவது அலையில் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் மற்றும் பிற அமைப்புகள் செய்த நிவாரண சேவைப் பணிகள் குறித்தும் மீளாய்வு செய்கிறாா்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆக.1 வரை வேலூரில் தங்கும் அவா், அரசு சாரா தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு பெற்ற பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறாா். தொடா்ந்து ஆக.2, 3 ஆகிய நாள்களில் சென்னையில் இருக்கிறாா்.