தமிழகத்தில் 2,312-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 2,312 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 2,312 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக கோவையில் 252 பேருக்கும், சேலத்தில் 168 பேருக்கும், தஞ்சாவூரில் 158 பேருக்கும், ஈரோட்டில் 152 பேருக்கும், சென்னையில் 144 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 31,118 -ஆக அதிகரித்துள்ளது.

சேலம், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு சற்று உயா்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து வெள்ளிக்கிழமை 2,986 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.68 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 29,230 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 46 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,652-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com