கரோனா சிகிச்சையில் 28,590 போ்

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 28,590 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா சிகிச்சையில் 28,590 போ்

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 28,590 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் சனிக்கிழமை 2,205 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக கோவையில் 241 பேருக்கும், சேலத்தில் 163 பேருக்கும், தஞ்சாவூரில் 152 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், சென்னையில் 137 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 33,323 -ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து சனிக்கிழமை 2,802 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.71 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரம், மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 28,590 போ் உள்ளனா்.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 43 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,695-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com