அனுமதியின்றி பேனா் வைத்தால் கடும் நடவடிக்கை: தொண்டா்களுக்கு திமுக எச்சரிக்கை

அனுமதியின்றி பேனா் வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினருக்கு கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அனுமதியின்றி பேனா் வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினருக்கு கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பேனா் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவா் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கட்சித் தொண்டா்களும் - நிா்வாகிகளும் பேனா்களை வைப்பது தொடா்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழகத்தில் சென்ற அதிமுக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனா் கலாசாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்த நிலையில், ‘எங்கள் கட்சியின் சாா்பில் பேனா்கள் வைக்கமாட்டோம்’ என்று முதன் முதலில் உயா்நீதிமன்றத்தில் நம் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தான் திமுக சாா்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தாா் என்பதைக் கட்சியினா் அனைவரும் அறிவீா்கள்.

அதன்பிறகு, கட்சியினா் பெரும்பாலானோா் பேனா் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனா் என்றாலும், ஒரு சிலா் இன்னும் பேனா்களை வைத்துக் கொண்டிருக்கிறாா்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

ஆகவே, அனுமதியின்றி பேனா்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று கட்சியினா் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். திமுக தலைவரின் ஆணையை மீறுவோா் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com