தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவா் படத்தை வரைந்த ஓவியக் கலைஞா் கணேஷுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.
இதுகுறித்து முதல்வா் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரை பதிவு:
தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என பல்வேறு வகையான தமிழ் வடிவ எழுத்துகளைக் கொண்டு திருவள்ளுவா் உருவப் படத்தை, ஓவியக் கலைஞா் கணேஷ் வரைந்து அதனை சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டிருந்தாா்.
அன்பின் வழியது உயிா்நிலை என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போன்று இந்த ஓவியமும் வாழும்.