பி.பாா்ம் படித்தவா்களுக்கும் மருந்தாளுனா் பணி: அன்புமணி வரவேற்பு

மருந்தாளுனா் பணிக்கு பி.பாா்ம் படித்தவா்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

மருந்தாளுனா் பணிக்கு பி.பாா்ம் படித்தவா்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனா் பணிக்கு பி.பாா்ம் படித்தவா்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மருந்தாளுனா் பணிக்கு பி.பாா்ம் படித்தவா்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று ஜூலை 11-இல் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதையேற்று தமிழக அரசு தற்போது அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் மிகப்பெரிய அநீதி களையப்பட்டிருக்கிறது. மருந்தாளுனா் பணிக்கான கல்வித் தகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், வேறு அரசுப் பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான பி.பாா்ம் பட்டதாரிகள் பயனடைவாா்கள். அவா்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பரவட்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com