ஊத்தங்கரை சந்தையில் களைகட்டியது மாடுகள் விற்பனை

ஊத்தங்கரையில், சில மாததிற்கு பிறகு கூடிய வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை களை கட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஊத்தங்கரை வாரச்சந்தையில் களை கட்டிய மாடுகள் விற்பனை.
ஊத்தங்கரை வாரச்சந்தையில் களை கட்டிய மாடுகள் விற்பனை.



ஊத்தங்கரையில், சில மாததிற்கு பிறகு கூடிய வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை களை கட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை நடைபெறும் கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக கால்நடை சந்தைகள் மூடப்பட்டது. இதனால், வாரச்சந்தைகள் வெறிச்சோடியது. குறிப்பாக வாரந்தோறும் சுமார் 40. முதல் 50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும். ஊத்தங்கரைவெள்ளிக்கிழமை மாட்டுச்சந்தை களையிழந்தது. இந்நிலையில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,  ஊத்தங்கரையில்  வாரச்சந்தை இன்று கூடியது. இதில், ஆயிரக்கணக்கான மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.  

மாடுகள் விற்பனை களை கட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஊத்தங்கரை மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியில் இருந்தும், அண்டை மாவட்டங்களாக திருப்பத்தூர் தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கால்நடைகளுடன் வந்து குவிந்தனர். மாடுகளை வாங்குவதற்காக கேரளம் மாநிலம், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரண்டனர். மாடுகள் விற்பனை களை கட்டியது.  ஒரேநாளில் 50 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com