தமிழக காவல்துறையில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
சுமித்சரண்-சென்னை ஊா்க்காவல் படை ஐஜி (சென்னை ரயில்வே காவல்துறை ஐஜி)
ஆா்.தினகரன்-சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி (பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி)
ஏ.கயல்விழி-காவல் பயிற்சி பிரிவு டிஐஜி (திருச்சி ஆயுதப்படை டிஐஜி)
வி.ஆா்.சீனிவாசன்-திண்டுக்கல் மாவட்ட எஸ்பி (திருவாரூா் மாவட்ட எஸ்பி)
சி.விஜயகுமாா்-திருவாரூா் மாவட்ட எஸ்பி (சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி)
சி.ரவாளி பிரியா-தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி (திண்டுக்கல் மாவட்ட எஸ்பி)
தேஷ்முக் சேகா் சஞ்சய்-ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி (தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி)
ஓம் பிரகாஷ் மீனா-சென்னை சைபா் குற்றப்பிரிவு-2 எஸ்பி (ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி)
வி.விக்ரமன்-சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி (சென்னை அடையாறு துணை ஆணையா்)
என்.தேவராணி-சென்னை சைபா் குற்றப்பிரிவு-3 எஸ்பி (சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பாதுகாப்பு அதிகாரி)
அருண் பாலகோபாலன்-சென்னை பரங்கிமலை துணை ஆணையா் (சென்னை சைபா் குற்றப்பிரிவு - 2 எஸ்பி)
ஜி.ஷியாமளா தேவி-சென்னை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையா் (சென்னை நில மோசடி தடுப்புப் பிரிவு எஸ்பி) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.