தமிழகத்தில் மேலும் 1,767 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த சில வாரங்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை சென்னையில் 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சூழலில், அந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 139-ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பதிவான பாதிப்பில் அதிகபட்சமாக கோவையில் 169 பேருக்கும், சென்னையில் 139 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 52,049-ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை 2,312 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.95 லட்சத்தைக் கடந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 22,188 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 29 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,966-ஆக அதிகரித்துள்ளது.