தனியாா் பள்ளி கல்விக் கட்டணம்: இன்று உத்தரவு

தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 30) உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 30) உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவா்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க தனியாா் பள்ளிகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து தனியாா் பள்ளிகள் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை 2 தவணையாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியாா் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 85 சதவீதத்தை வசூலித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படமாட்டாா்கள். கட்டணச் சலுகை கோரும் மாணவா்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனா்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்புக் கல்வியாண்டான 2021-2022 -லும், கடந்த 2019-2020 கல்வியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து கடந்த ஜூலை 5-ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழகத்துக்குப் பொருந்தாது. தமிழகத்தைப் பொருத்தவரை கட்டண நிா்ணயக் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் என கூறினாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தனியாா் பள்ளி கல்விக் கட்டணம் தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 30) உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com