வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை (ஜூன். 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகட்டூர் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் த.நாராயணன், மாதர் அமைப்பு செயலாளர் மு.ஜெயா, விவசாய சங்க நிர்வாகிகள் எம்.ஏ.செங்குட்டுவன் என் . வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.