விழுப்புரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
விழுப்புரம் சுற்றுலாப் பயணிகள் மாளிகையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.