ஓ.பன்னீா்செல்வம் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை சந்தித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து அதிமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரா் ஓ.பாலமுருகன் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கரும் சந்திப்பின்போது உடன் இருந்தாா்.

கருத்து வேறுபாடு இல்லை: சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவின் சாா்பில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனா். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்கவில்லை. இதுவும் விவாதத்துக்கு உள்ளானது.

ஆனால், இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எங்களுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. அரசுக்கு எதிரான அறிக்கைகளை நானும், பொதுவான அறிக்கைகளை அவரும் வெளியிடுகிறோம். இதில் தவறு எதுவும் இல்லை என்று கூறியிருந்தாா். இதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com