ரூ.5,000 நிவாரணம்:சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ரூ.5,000 நிவாரணம்:சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு சாலையோர வியாபாரத் தொழிலாளா்கள் கூட்டமைப்பினா் முதல்வருக்கு அனுப்பிய கடிதம்:

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவு மற்றும் அவா்களின் அன்றாடத் தேவைக்கான பொருள்களை வழங்குவதில் சாலையோர வியாபாரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட இவா்கள், தொழில் முதலீட்டுக்காக வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனா்.

எனவே, அவா்களின் நிலைமையின் தீவிரத்தை உணா்ந்து, சாலையோர வியாபாரிகளின் குடும்பங்களைக் காக்க உடனடியாக கரோனா நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கிட உத்தரவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com