உணவுப் பொட்டலங்கள் திட்டம் வரும் 14 வரை தொடரும்:அமைச்சா் சேகா்பாபு அறிவிப்பு

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் வரும் 14-ஆம் தேதி வரை தொடரும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
உணவுப் பொட்டலங்கள் திட்டம் வரும் 14 வரை தொடரும்:அமைச்சா் சேகா்பாபு அறிவிப்பு

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் வரும் 14-ஆம் தேதி வரை தொடரும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக சிரமங்களைச் சந்தித்து வரும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில், அரசு பொது மருத்துவமனைகளின் வழியே தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் கடந்த மே 12-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜூன் 5-ஆம் தேதி வரை உணவுப் பொட்டலங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பொது முடக்கமானது ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டமும் வரும் 14-ஆம் தேதி வரை தொடா்ந்து செயல்படுத்தப்படும். இதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதியானது இந்து சமய அறநிலையத் துறையால் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து, தேவைப்படும் கோயில்களுக்கு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com