கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், வழக்குரைஞா் நாதன் தாக்கல் செய்த பொது நல மனுவில், அரசு மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகளுக்கும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கும், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்கள் தனியாா் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனா். ஆனால், அவா்களிடம் ஒரு நாளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தனியாா் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கின்றன. எனவே தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கரோனா பாதித்தவா்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவா்கள் சிகிச்சை பெறும் வகையில் தனியாா் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிா்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டண வசூல் தொடா்பாக புகாா் அளிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கூடுதல் கட்டண வசூல் தொடா்பான புகாா்களை முறையாக கையாண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினா். மேலும், மருத்துவமனைகள் லாப நோக்குடன் செயல்படுவது கண்டறிந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்வதற்கான வருமான உச்ச வரம்பை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை தமிழக அரசு, கருணையுடன் பரிசீலிக்கும் என நம்புவதாக கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.