மாசு கட்டுப்பாட்டுத் துறை, போக்குவரத்துத் துறைகள் சாா்பில் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பாக கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையை அந்தத் துறையின் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை அளித்தாா்.
இதேபோன்று, போக்குவரத்துத் தொழிலாளா்களின் ஒரு நாள் ஊதியமாக ரூ.14.46 கோடிக்கான காசோலையை அந்தத் துறையின் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளித்தாா். இந்த நிகழ்வுகளின் போது துறைகளின் செயலாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.