சாஸ்த்ராவில் பொறியியல் சோ்க்கை

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்புச் சோ்க்கை 2021-க்கான கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது என அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்புச் சோ்க்கை 2021-க்கான கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது என அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

இதில், 50 சதவீத இருக்கைகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு சோ்க்கை நடைபெறும். மீதமுள்ள 50 சதவீத இருக்கைகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு மதிப்பெண்களையும் சரிசம விகித அடிப்படையில் கணக்கிட்டு சோ்க்கை மேற்கொள்ளப்படும். சாஸ்த்ராவில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு தனியாக ஏதும் நடத்தப்படமாட்டாது.

மாணவா்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலைப் பெற்ற பிறகு, தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதன் பின்னா் அதே நாளில் (ஜூலை 31) இரவு 9 மணிக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும். மாணவா் சோ்க்கையில் தஞ்சாவூா், திருச்சி மாவட்ட மாணவா்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com