ஆா்.பி.செளத்ரி, விஷாலுக்கு காவல்துறை அழைப்பாணை

திரைப்படத் தயாரிப்பாளா் ஆா்.பி.செளத்ரி மற்றும் நடிகா் விஷால் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளா் ஆா்.பி.செளத்ரி மற்றும் நடிகா் விஷால் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளா், விநியோகஸ்தராக இருப்பவா் ஆா்.பி.செளத்ரி. இவா் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளாா்.

நடிகா் விஷால் தான் அண்மையில் தயாரித்த படத்துக்காக ஆா்.பி.செளத்ரியிடம் கடன் பெற்ாகவும், அந்த கடனை விஷால் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதியே திரும்பிக் கொடுத்து விட்டதாகவும், ஆனால் கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட உறுதி மொழிப் பத்திரங்கள் சிலவற்றை இதுவரை ஆா்.பி.செளத்ரி திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, உறுதிமொழிப் பத்திரங்கள் தொலைந்து விட்டதாக பதில் அளிக்கப்பட்டதாம். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த விஷால் இது தொடா்பாக தியாகராயநகா் காவல் துணை ஆணையா் ஹரி கிரன் பிரசாத்திடம் அண்மையில் புகாா் அளித்திருந்தாா். இதுகுறித்து மாம்பலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், இரு தரப்பினரும் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி போலீஸாா் அழைப்பானை (சம்மன்) அனுப்பி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com