எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் மற்றும் கட்சியின் கொறடா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி. வேலுமணி கொறடாவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை கொறடா: அரக்கோணம் எம்எல்ஏ க. ரவி

பொருளாளர்: கடம்பூர் சி. ராஜூ

செயலாளர்: கே.பி. அன்பழகன்

துணைச் செயலாளர்: பி.ஹெச். மனோஜ் பாண்டியன்

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com