வாலாஜாபேட்டை நகராட்சி முறையாக ஊதியம் வழங்கவில்லை என தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் சமூக இடைவெளியின்றி கரோனா நோய்த் தொற்று பரவும் விதமாக தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.