சாமானியர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காவல் துறையினரின் தாக்குதலால் படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்தது தொடர்பாக கனிமொழி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, சாமானிய மக்கள் மீது காவல் துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.
மே 7-ம் தேதிக்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும் என்றும், நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.