தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கரோனா இரண்டாம் அலையால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்ட்டுள்ளது. மாநில பாடத்திட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்களில் மதிப்பெண் கணக்கீட்டு முறையை இறுதி செய்து தேர்வு முடிவுகளை வெளியிட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இதையடுத்து. தமிழக மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டுக்காக அவர்களின் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிபெண்களை இணையத்தில் பதிவேற்ற அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.