மக்கள் நீதி மய்யத்துக்கு புதிய நிர்வாகிகள்: ஆலோசகராக பழ.கருப்பையா நியமனம்

மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப்படம்)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப்படம்)

மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தை சேர்த்த ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த மாநில நிர்வாகிகளான சந்தோஷ் பாபு, குமரவேல் உள்ளிட்ட பலர் விலகினார்கள்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகளை நியமித்து இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் அரசியல் ஆலோசகர்களாக பழ.கருப்பையா மற்றும் பொன்ராஜ், துணைத் தலைவர்களாக ஏ.ஜி.மெளரியா மற்றும் தங்கவேலு, மாநில செயலாளர்களாக செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ மற்றும் சரத்பாபு, நிர்வாக குழு உறுப்பினர்களாக ஸ்ரீப்ரியா சேதுபதி, நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளராக ஜி.நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com