சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.ஜெகநாதனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கல்விப் பணியில் 39 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆர்.ஜெகநாதன், அடுத்த 3 ஆண்டுகள் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல்வராக ஜெகநாதன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.