திமுகவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை: கொ.ம.தே.க.

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது குறித்து கொ.ம.தே.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து ஈஸ்வரன் கூறியது:

"திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவோடு எங்களது கட்சியின் குழு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. எங்களது கட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இரண்டு தரப்பு நிலைப்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதித்த பிறகு அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று முடிவெடுப்போம்.

தொகுதிகள் எண்ணிக்கை ஆட்சி மன்றக் குழுவில் விவாதிக்க வேண்டிய விஷயம். எனவே, அதுகுறித்து பின்னர் தெரிவிக்கப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com