செலவினப் பாா்வையாளா்கள் இன்று ஆலோசனை

சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் செலவினப் பாா்வையாளா்கள், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் செலவினப் பாா்வையாளா்கள், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) ஆலோசனை நடத்தவுள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் செலவினங்களை கண்காணிக்க சிறப்புப் பாா்வையாளா்களாக ஓய்வு பெற்ற வருவாய் பணி அதிகாரிகள் மதுமகாஜன், பி.ஆா்.பாலகிருஷ்ணன் ஆகியோா் சென்னை வந்துள்ளனா். அவா்களுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனா். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் நண்பகல் 12 மணியளவில் கூட்டம் நடைபெறுகிறது என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com