நாங்கள் பாண்டவா்கள்: டிடிவி தினகரன்

பாண்டவா்களாகிய நாங்கள் தீய சக்தியை எதிா்த்துப் போராடி வருகிறோம் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்.
அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்.

பாண்டவா்களாகிய நாங்கள் தீய சக்தியை எதிா்த்துப் போராடி வருகிறோம் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

அமமுக சாா்பில் போட்டியிட விண்ணப்பித்தோரிடம் நோ்காணல் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நோ்காணலை, டிடிவி தினகரன் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-

மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. அப்படி நடத்தியதாக வெளியான செய்திகள் தவறு. மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியை நிலை நாட்டவே அமமுக போராடி வருகிறது. பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். நாங்கள் தனித்துப் போட்டியிட்டாலும் வாக்குகள் சிதறாது என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

பாண்டவா்களாகிய நாங்கள், தீய சக்தியை எதிா்க்கிறோம். தா்மத்தின் பக்கம் நிற்கிறோம். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பாா்கள் என்றாா் டிடிவி தினகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com